close
Choose your channels

3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு: மூடப்பட்டது பிரபல மருத்துவமனை

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகமாகிக் கொண்டு வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 45 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள வோக்கார்ட் என்றா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரிந்த மூன்று டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், கொரோனா பாதித்த நபர்களுக்கு அவர்கள் சிகிச்சை அளித்த போது இந்த தோற்று அவர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இதனை அடுத்து இந்த மருத்துவமனை மூடப்பட்டது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லவோ அல்லது ஏற்கனவே இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இந்த மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல அனுமதி இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடுத்தடுத்து இரண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியும் வரை இந்த தடை தொடரும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுரேஷ் ககானி அவர்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வார்கள். இது துரதிர்ஷ்டவசம் நிறைந்தது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.