தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம்… அதிர்ச்சி தகவல்!

அவசரகால அடிப்படையில் கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தற்போது இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக் கொண்ட 3 சுகாதாரப் பணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மயக்கம் அடைந்தவர்களை அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தித்ததாகவும் தற்போது அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியானது 2 லட்சத்து 11 ஆயிரத்து 848 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் டோஸ் வழங்கும் நடைமுறை முதன் முதலாக இன்று துவங்கப்பட்டு இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 3,126 சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது தஞ்சையில் 200 சுகாதாரப் பணியாளர்கள் 2 ஆவது டோஸ் மருந்தை செலுத்திக் கொண்டு உள்ளனர். இப்படி செலுத்திக் கொண்ட 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

More News

ஓவியாவா இப்படி ஒரு டுவீட்டை போட்டது? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு

உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது: கமல்ஹாசன்

சாத்தூரில் நேற்று நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இறைச்சலில் அடங்கி விடக்கூடாது என்றும் உடனடி நடவடிக்கை தேவை

ஒரே நேரத்தில் 130 வாகனங்கள் நொறுங்கிய சம்பவம்… பீதி ஏற்படுத்தும் சாலை விபத்து!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இடையே தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது.

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: ஹீரோ யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்! வைரல் புகைப்படம்!

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.