close
Choose your channels

குடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பதிவுகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது உத்திரப்பிரதேச மாநிலம். இந்த மாநிலத்தில் பெண்கள் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசியக் குற்றப்பிரிவு கழகம் சுட்டிக் காட்டுகிறது.

இந்நிலையில் புலந்த்ஷெஹர் எனும் மாவட்டத்தில் 13 வயதே ஆன சிறுமி தண்ணீர் தாகம் எடுத்து அருகில் இருந்த வீடு ஒன்றில் தண்ணீர் கேட்டு இருக்கிறார். இந்தச் சமயத்தை பயன்படுத்திக் கொண்ட ஆசாமி ஒருவர் அச்சிறுமியை கற்பழிக்க முயற்சித்து, பின்பு சிறுமி சத்தம் எழுப்பியதால் பயந்துபோய் அவரை கொலை செய்து மண்ணில் புதைத்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரஷ்ரா எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 25 ஆம் தேதி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேலைக்கு சென்று இருக்கிறார். அந்தத் தாயுடன் வேலை செய்து கொண்டு இருந்த 13 வயது சிறுமி அருகில் இருந்த வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டப்போது இந்த விபரீத சம்பவம் நடந்து உள்ளது. இதனால் சிறுமியை காணாத தாய் புலம்பி போலீஸ் உதவியை நாடியுள்ளார். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸாரும் திணறி உள்ளனர்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த வீட்டில் விசாரித்தபோது டெல்லியை சேர்ந்த ஹரேந்திரா (22) என்பவர் சிறுமியைக் கற்பழிக்க முயற்சி செய்து பின்பு கொன்று புதைத்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தற்போது போக்ஷோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் 13 வயது சிறுமியை கொலை செய்து புதைத்தச் சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.