close
Choose your channels

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதல்: 35 வயது பெண் மர்மமான முறையில் கொலை!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதலில் இருந்த 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது நெல்லை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முத்து பாண்டி. இவருக்கு முப்பிடாதி என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் முப்பிடாதி வீட்டிற்கு அடிக்கடி சிலர் வந்து போவதாகும் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கள்ளக்காதலர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததை அடுத்து முத்துப்பாண்டிக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் மனைவிக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் முப்பிடாதி தொடர்ந்து கள்ளக்காதலில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முப்பிடாதி தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை மர்ம நபர்கள் சிலர் சரமாரி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முப்பிடாதியை கொலை செய்தது யார்? கள்ளக்காதலர்களில் ஒருவரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் 20 வயது இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் ஒரு சிலரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.