ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் சிக்கிய 32 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 7.30 மணிக்கு சதி எனும் இடத்தில் இருந்து சாட்னா எனும் இடத்திற்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் 54 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தப் பேருந்து பாட்னா எனும் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதில் பயணம் செய்த 32 பேர் தற்போது சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்திற்கு கடும் வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயிரிழந்தோரின் குடும்பத்திறகு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அதேபோல இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கடந்த 7 ஆம் தேதி உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய நூற்றுக் கணக்கானோரில் இதுவரை 58 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் டிரக் ஒன்று கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ம.பி.யில் மேலும் 32 பேர் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது

அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது 

2 வருடத்திற்கு பிறகு முதல் விக்கெட்… உணர்ச்சியில் அழத் தொடங்கிய வீரரின் வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருக்கும் குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின் பவுலராக அறியப்படுகிறார்

சாம்ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல நடிகை: டைட்டில் அறிவிப்பு!

'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சாம்ஜோன்ஸ் தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மைதானத்திலேயே ஸ்டெப் போட்ட அஸ்வின்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று அபாரமாக வெற்றி பெற்றது.