close
Choose your channels

அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீரஞ்சனி. இவர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ’நெஞ்சம் மறப்பதில்லை’ உள்பட ஒருசில தொடர்களில் நடித்த பார்கவ் என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பார்கவ்-ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீரஞ்சனி தொலைக்காட்சிகளில் அதிகம் தலை காட்டவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீரஞ்சனி தற்போது அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக ‘இந்த உலகில் பார்க்கும் இடங்கள் நிறைய இருக்கிறது. நாங்கள் எங்காவது தொடங்க வேண்டும்’ என்று ஸ்ரீரஞ்சனி பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீரஞ்சனியின் கணவர் பார்கவ் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’திருமதி ஹிட்லர்’ என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.