ஊரடங்கால் பசி பட்டினி: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஊரடங்கு காலத்தை சமாளிக்க முடியாமல், கையில் பணம் இல்லாததால் தற்கொலை செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மீர்பட் என்ற பகுதியில் ஸ்வர்னாபாய் என்ற 55 வயது பெண்ணும் அவரது மகன் ஹரிஷ், கிரிஷ் மற்றும் மகள் ஸ்வப்னா ஆகிய நால்வரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர். இந்த குடும்பத்தில் 23 வயது கிரிஷ் மட்டுமே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் மற்ற மூவரும் வேலையின்றி இருப்பதால் ஏற்கனவே கடனில் இருந்ததாகவும், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த குடும்பத்தினர் வறுமையிலும் பசியாலும் வாடியதால் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை குறித்த செய்தியை கேட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தற்கொலைக்கு முன் குடும்பத்தினர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும் இந்த குடும்பத்தினர்களுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து அவர்களுடைய உறவினர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே மே 3ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் கொரோனா பிரச்சனை முடிவடைந்தாலும், அதன் பிறகு ஏற்பட போகும் இதுபோன்ற பாதிப்புகள் இப்போதே கலக்கத்தை ஏற்படுத்துகின்றன என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்,.

More News

இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா

உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸிற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர்

முதல்முறையாக ரசிகர்களுடன் உரையாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும்

சிரஞ்சீவி விடுத்த சவாலை ஏற்பாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தற்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

'நான் சும்மா இருந்தா சும்மா இருக்க மாட்டேன்': வைரலாகும் கவின் வீடியோ

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்பு இல்லாததால் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பரிசோதனையில் ஜெர்மனி கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

ஜெர்மனியின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருக்கிறது.