close
Choose your channels

முதல்முறையாக ரசிகர்களுடன் உரையாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

Thursday, April 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரே தளம் சமூக வலைத்தளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சமூக வலைத்தளங்கள் பக்கமே வராத மணிரத்னம் கூட சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு அவர் ரசிகர்களுடன் உரையாடவிருப்பதாகவும் சுவாரஸ்யமான கேள்விகளை அவரிடம் ரசிகர்கள் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததும் அவருக்கு ஆதரவான பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. கடைசியில் ஆன்லைனுக்கு இசைக்கடவுள் வந்துவிட்டார் என்றும், இதற்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தோம் என்றும், என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்துவிட்டேன் என்றும் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. இதில் ஒரு விஜய் ரசிகர் ‘மாஸ்டர்’ அப்டேட் குறித்து ஏதாவது சொல்லுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.