close
Choose your channels

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்

Wednesday, April 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 50க்கு மேல் அதிகரித்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று மட்டும் தமிழகத்தில் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 42 பேரும் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்றும் இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது என்பதும் இதில் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் மட்டும் 679 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 60739 பேர் இருப்பதாகவும், கொரோனா வார்டில் 230 பேர் இருப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துளார். மேலும் கொரோனா வார்டில் 28 நாட்கள் நிறைவு செய்யப்பட்டவர்கள் 32075 பேர் இருப்பதாகவும் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6095 என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.