close
Choose your channels

சில அடி தூரத்தில் மகள் இருந்தும் நெருங்க முடியாத தாய்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

Wednesday, April 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸால் தினமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்களும் வீட்டிற்கு செல்ல முடியாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரியும் பெண் ஒருவர் தன்னுடைய மகள் கண்முன் சில அடி தூரம் இருந்தும் அவரை நெருங்க முடியாத நிலையில் இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்க்க வேண்டும் என்று அவரது 5 வயது மகள் அழுததால் அவருடைய தந்தை மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றார். ஆனால் மகள் தன் கண்முன் சில அடிகள் தூரத்தில் இருந்த போதும் அவரை நெருங்க முடியாமல் அந்த தாய் பரிதவித்த தவிப்பும், ‘மம்மி பக்கத்தில வா’ என அந்த குழந்தை அழுத அழுகையும் பார்ப்போரை கண்கலங்க செய்தது.

கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை நெருங்க முடியாத சோகத்தில் அழும் மகளை தூரத்திலிருந்தே பார்த்த தாய், மகள் கதறி அழுவதை பார்க்க சகிக்காமல் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படியும் விரைவில் தான் வீடு திரும்புவதாக சமாதானம் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos