5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

திருமணம் முடிந்து ஏழு மாதமே ஆன ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மரணமடைந்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் என்ற ஊரில் 28 வயது கணேஷ்பாபு என்பவருக்கும் 20 வயது சூர்யா என்பவருக்கும் கடந்த ஏழு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து சூர்யா 5 மாத கர்ப்பமாக இருந்தார்

இந்த நிலையில் கணேஷ்பாபு-சூர்யா தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்து கொண்டதாக தெரிகிறது. இதே போல் நேற்றும் ஒரு தகராறு வர, சூர்யாவை கணேஷ்பாபு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அழுது கொண்டே இருந்த சூர்யா திடீரென தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டதாக அவருடைய தாயாருக்கும் கணேஷ் பாபு போன் செய்து தகவல் கூறியுள்ளார் 

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சூர்யாவின் பெற்றோர் உடனடியாக வந்து சூர்யாவை தூக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்

சூர்யாவின் பெற்றோர் ’என் மகளை கணேஷ்பாபுவும் அவருடைய அம்மாவும் தான் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சூர்யாவின் கணவர் கணேஷ்பாபுவையும், அவரது அம்மா லட்சுமியையும் கைது செய்தனர் 

ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

More News

முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்

திருச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்

பாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..!

எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவலாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருகிறார்.

தளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை?

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் இயக்குனர்