செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கன அடி நீர்: 20 பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் நிவர் புயல் காரணமாக தொடர்ச்சியாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவும் அதிகரித்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பகுதிகள் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் கூடுதலாக அதாவது வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனே பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News

புயலால் காரில் செல்ல முடியாத நிலை: சமயோசிதமாக சிந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் அவசரமாக ஹைதராபாத் செல்ல இருந்த நிலையில் புயல் பாதிப்பு காரணமாக எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு! இப்போது எவ்வளவு தெரியுமா?

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி இருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால்

10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர் நண்பனை எதிரியாக்கிய விஷால்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும்

புயலில் விழுந்த மரங்கள்: சாமானியன் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்

வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,