close
Choose your channels

கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த 52 வயது நபர்!

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற 52 வயது பெயிண்டர் ஒருவர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கேயே அவர் தங்கி வேலை செய்து வந்த போது ஸ்வேதா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். 50 வயதுக்கு மேலாகியும் திருமணமே செய்யாமல் இருந்த சுபாஷிற்கு ஸ்வேதாவை பார்த்ததும் திருமண ஆசை வந்தது.

ஏற்கனவே ஸ்வேதாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையிலும் அவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் சுபாஷ். இந்த நிலையில் சுனிதாவை திருமணம் செய்ய முடிவு செய்து அவரை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் ஸ்வேதா தனது கணவரையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், ஊதாங்குழல் மற்றும் அம்மிக்கல்லால் அடித்து ஸ்வேதாவை கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சுபாஷ் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் சரக்கு அடித்துக் கொண்டு இருந்ததாகவும் போதையில் ஸ்வேதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த சுபாஷ் அவரை கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு கள்ள காதலனுடன் ஓடி வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபமான முடிவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.