6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எத்ஜாகிர் என்ற கிராமத்தில் 6 வயது சிறுவன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சகோதரன், மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்துவிட்டதாக சிறுவனின் சகோதரி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து சோகத்துடன் அந்த சிறுவனுக்கு பெற்றோர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து மறைந்த சிறுவனின் சகோதரி தனது பெற்றோரிடம் மன உறுத்தல் காரணமாக உண்மையை கூறியுள்ளார். தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், தனது காதலன் வீட்டுக்கு வந்ததை சகோதரன் பார்த்துவிட்டதால் தனது காதலன் அவனை கொலை செய்துவிட்டதாகவும், காதலனை காப்பாற்றுவதற்காக மாடியில் இருந்து சகோதரன் விழுந்துவிட்டதாக கூறியதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மறைந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாகவுள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மறைந்த சிறுவனின் சகோதரியும் கைது செய்யப்பட்ட நிலையில், புதைக்கப்பட்ட சிறுவனின் பிணத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

More News

ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து

சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? ஒரு ஆச்சரிய வீடியோ!

கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தால் கூட ஆயிரக்கணக்கில் தான் வருமானம் வரும் என்ற நிலையில் இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்த ஒருவர் லட்சக் கணக்கில் சம்பாதித்த தகவல்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி காட்டும் மாநிலம்!!!

கொரோனா சிகிச்சைக்கு இன்றுவரை முழுமையான சிகிச்சை மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை விஞ்ஞானிகளிடையே புது நம்பிக்கையை அளித்திருக்கிறது

திருடனைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் கொரோனாவையும் கண்டுபிடிக்குமா??? சுவாரசியத் தகவல்!!!

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

வாலிபர் அனுப்பிய ஆபாச மெசேஜ்: அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி!

வாலிபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி காதல் டார்ச்சர் செய்ததால் அதிர்ச்சி அடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது