close
Choose your channels

கோவையில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவன் கைது!

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அருகே உள்ள துடியலூர் என்ற பகுதியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த கொடூர சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த சிறுமியை கொலை செய்த கயவனை கண்டுபிடிக்க போலீசார் பத்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்

இந்த நிலையில் போலீசார்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கயவனை போலீசார் தற்போது கைது செய்தனர். சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் முதல்கட்ட விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சந்தோஷ்குமாரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் இந்த விசாரணையில் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.