மூன்று முறை திருமணமான 62 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞர் காதல்!

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

மூன்று முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் பேரக் குழந்தைகள் இருக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை 26 வயது இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் 62 வயதான பெண் இசபெல். இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர். மூன்று கணவர்களும் இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பேஸ்புக்கில் இவர் ஒரு துனிசியா நாட்டு இளைஞருடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து அந்த இளைஞர் தனது காதலை இசபெல்லாவிடம் தெரிவித்தார். முதலில் யோசித்த இசபெல்லா அதன் பிறகு அந்த இளைஞரின் காதலை ஏற்றுக் கொண்டார். இதன்பின் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இந்த திருமணம் நடந்தது

இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் அவரவர் நாட்டில் பிரிந்து இருப்பதாகவும் மிக விரைவில் தனது மனைவியை சந்திக்க தான் இங்கிலாந்துக்கு செல்லவிருப்பதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்த திருமணம் குறித்து அந்த இளைஞர் மேலும் கூறியபோது ’இசபெல்லாவை தான் வயதான பெண்ணாக பார்க்கவில்லை என்றும் அவருடைய நல்ல குணத்தை பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியதோடு, எங்களை இப்போதைக்கு கொரோனா பிரிந்தாலும் என் மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த வித்தியாசமான திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெகு அரிதாகவே ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

பிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்!

திரைப்படங்களுக்கு இருப்பது போல் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசம், வன்முறை ஆகிய காட்சிகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 9 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் நிலவும் புதிய சர்ச்சை??? உலகப் போருக்கான அறிகுறியா இது??? பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் காரணம்!!!

இந்தியாவில் கொரோனா ஒருபக்கம் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் வேளையில், இன்னொரு பக்கம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்து வருகிறது.

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்த 5 வயது சிறுவன்: சக விமான பயணிகள் நெகிழ்ச்சி

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது