close
Choose your channels

போதை பத்தல... சானிடைசர் குடித்த 7 பேர் பலி... பரபரப்பு சம்பவம்!!!

Monday, November 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதை பத்தல… சானிடைசரை குடித்த 7 பேலி பலி… பரபரப்பு சம்பவம்!!!

 

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது சிலர் போதைக்காக சானிடைசரை அருந்தி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதே டெக்னிக்கை ரஷ்யாவில் ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது சிலர் கடைப்பிடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி நகரில் டொமடோர் எனும் பகுதியில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அந்த விருந்து நிகழ்ச்சியின்போது மது பற்றாமல் சிலர் அதிக போதைக்காக சானிடைசரை குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் மேலும் 2 பேர் கோமா நிலைக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற சம்பவம் நமது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. முதலில் அதிகப் போதைக்காக சிலர் கள்ளச்சாரயத்துடன் சானிடைசரை கலந்து குடித்தனர். இதனால் 19 பேர் உயிரிழந்த நிலையில்  மீண்டும் அதே மாநிலத்தில் 3 பேர் தண்ணீரில் சானிடைசரைக் கலந்து குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தின் சிறையில் வைக்கப்பட்டு இருந்த கைதி ஒருவர் மது என்று நினைத்து  சானிடைசரைக் குடித்து உயிரிழந்தார். சானிடைசரில் 60% க்கும்மேல் ஆல்கஹால் இருப்பதை தெரிந்து கொண்ட சிலர் இப்படி அறியாமையினால் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்ந்து கொண்டே வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.