close
Choose your channels

2 முறை தோல்வி. 3வது முறை ஜெயித்து ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி..!

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2 முறை தோல்வி. 3வது முறை ஜெயித்து ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வெற்றிபெற்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. மேலும் சுயேட்சையாக போட்டியிட்ட பலரும் வெற்றி பெற்று உள்ளனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வீரம்மாள் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 193 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 3வது முயற்சியில் வென்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.