close
Choose your channels

தமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று தமிழகத்தில் 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19372ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 827 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 559 என்பதால் இன்றும் சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,762ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இதுவரை 4,55,216 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.