இன்று ஒரே நாளில் 88 பேர் பலி: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களாக சராசரியாக 60 பேர் பலியான நிலையில் நேற்று 70 பேர்களுக்கு அதிகமாகவும் இன்று 80 பேர்களுக்கும் அதிகமாகவும் பலியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,65,714 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,598என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2403 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,856 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 48,195 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 18,79,499 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய 29 வயது ஆசிரியை!

29 வயது ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வந்த 15 வயது மாணவனுக்கு ஆபாசப்படம் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு ப்பிறப்பிக்கப்பட்டிருந்தும் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை

வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை: நீதிமன்றத்திற்கு குவியும் கண்டனங்கள்!

வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை என தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரஜினி, விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'ஜெயம்' படத்தில் அறிமுகமான இளம் ஹீரோவின் திருமண தேதி!

கடந்த 2002ஆம் ஆண்டு 'ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நிதின். இந்த திரைப்படம் தமிழில் அதே டைட்டிலில் கடந்த 2003ஆம் ஆண்டு உருவானது