close
Choose your channels

ரஜினி, விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

Saturday, July 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்ததாக மிரட்டல் போன் வந்தது. அதன்பின் விஜய் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம தொலைபேசி மிரட்டல் வந்தது. இந்த இரண்டு விஷயத்திலும் மனநிலை சரியில்லாதவர்கள் மிரட்டல் விடுத்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ரஜினி, விஜய்யை அடுத்து தற்போது சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்களின் இந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட விசாரணையில் இந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.