ஜோதிகாவின் அடுத்த படம்.. ரிலீஸ் திட்டத்தில் திடீர் மாற்றம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மம்முட்டி மற்றும் ஜோதிகா 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடித்த ’காதல் - தி கோர்’ என்ற மலையாள திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மம்முட்டி மற்றும் ஜோதிகா கடந்த 2009 ஆம் ஆண்டு ’சீதா கல்யாணம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடித்த திரைப்படம் ’காதல் - தி கோர்’ .
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை ஜியோ சினிமாவில் நேரடியாக ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படக்குழுவினர் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜோ பேபி இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments