close
Choose your channels

மன்னிப்பு கேட்ட பின்னரும் வழக்குப்பதிவு: சிக்கலில் சித்தார்த்?

Thursday, January 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சித்தார்த் மன்னிப்பு கேட்ட பின்னரும் அவர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தெரிவித்த ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்த நிலையில் அவர் சமீபத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அவரது மன்னிப்பை சாய்னா நேவல் ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகார் அளித்ததை அடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கால் சித்தார்த்துக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.