close
Choose your channels

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. மேலும் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் பிரமுகர்கள் சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பீகார் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. கரன்ஜோகர், சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் என நடிகை ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் பீகார் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார் .அவர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீசார் பலமணி நேரம் விசாரணை செய்தனர் என்பதும், சுஷாந்த்சிங் குறித்து அவர் பல்வேறு தகவல்கள் போலீசார்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.