close
Choose your channels

பிக்பாஸ் தொடங்கும் நாளில் போட்டியாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்

Sunday, October 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம் அதில் ஒருவர் நடிகை சனம்ஷெட்டி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனம்ஷெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது திடீரென புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக அவர் கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதுகுறித்து அவர் தர்ஷன்மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்திலும் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அடுத்த சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் திடீரென சனம்ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காதலித்து, நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.