பிரச்சனை மேல் பிரச்சனை: சூர்யாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி அவர்கள் சூர்யாவுக்கு இது குறித்து நீண்ட கடிதம் எழுதினார் என்பதும் அந்த கடிதத்தில் சூர்யாவும் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யா மீதும் படக்குழுவினர்கள் மீதும் பாமகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் உள்ளிட்டோர் மீது ஜெய்பீம் திரைப்படத்தில் அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிதம்பரம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தாலும் இன்னொரு பக்கம் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் இவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

அப்பாவாக நடித்தவருடன் திருமணமா? பரபரப்பு விளக்கம் அளித்த பாலிவுட் நடிகை!

சமீபகாலமாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் நடிகர் அமீர்கான் பற்றிய தகவல்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரியா? என்ன நடக்குது பிக்பாஸில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் அமீர் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மன்னிப்பு கேட்க முடியாது: ஹெட்மாஸ்டர் சிபியிடம் மோதிய பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே பிரியங்கா சக போட்டியாளர்களிடம் கருத்து வேறுபாடுடன் வாக்குவாதம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதலில் ராஜு, அதன் பின் தாமரை, தற்போது சிபியுடன் மோதும்

மருத்துவமனையில் இருக்கும் கமலஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்களுக்கு நேற்று கொரனோ பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.