close
Choose your channels

பிரச்சனை மேல் பிரச்சனை: சூர்யாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி அவர்கள் சூர்யாவுக்கு இது குறித்து நீண்ட கடிதம் எழுதினார் என்பதும் அந்த கடிதத்தில் சூர்யாவும் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யா மீதும் படக்குழுவினர்கள் மீதும் பாமகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் உள்ளிட்டோர் மீது ஜெய்பீம் திரைப்படத்தில் அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிதம்பரம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தாலும் இன்னொரு பக்கம் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.