சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சி. விஜய் மீது வழக்குப்பதிவு.

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்க்கார்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சிகரெட் புகைக்கும் காட்சி அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி கேரளாவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் விஜய் முதல் குற்றவாளியாகவும், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

சென்னையில் அஜித்-போனிகபூர் சந்திப்பு. அடுத்த பட ஆலோசனையா?

அஜித் நடித்துள்ள  'விஸ்வாசம் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு 

ஆர்யா நடித்த 'கஜினிகாந்த் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு 

திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்,

தளபதி 63 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு. விஜய் ரசிகர்கள்  குஷி.

தளபதி விஜய் நடித்த  'சர்க்கார் ' திரைப்படம் கடந்த தீபாவளி நாளில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள்