close
Choose your channels

சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சி. விஜய் மீது வழக்குப்பதிவு.

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்க்கார்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சிகரெட் புகைக்கும் காட்சி அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி கேரளாவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் விஜய் முதல் குற்றவாளியாகவும், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.