மீண்டும் ட்விட்டர் புளூடிக் பெற்ற பிரபலம்.. ரஜினி, விஜய் பெறுவது எப்போது?

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் அவற்றில் ஒன்று ப்ளூடிக் வைத்து இருப்பவர்கள் சந்தா பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

மேலும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சந்தா பணம் கட்டாதவர்கள் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பல பிரபலங்களின் ப்ளூடிக் நீக்கப்பட்டது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தோனி, விராட் கோஹ்லி உட்பட பல பிரபலங்களின் ப்ளூடிக் நீக்கப்பட்டது. இவ்வாறு ப்ளூடிக் நீக்கப்பட்டவர்களில் ஒருவர் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தான் ஏற்கனவே ப்ளூடிக் சந்தா பணம் செலுத்தி விட்டதாகவும், எனவே தனக்குரிய ப்ளூடிக் அளிக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தற்போது அவருக்கு ப்ளூடிக் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எலான் மஸ்க் அவர்களுக்கு நன்றி கூறிய அமிதாப் பச்சன், ‘சகோதரர் எலான் மஸ்க் அவர்களுக்கு எனது நன்றி! என் பெயருக்கு முன் ப்ளூடிக் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்காக ஒரு பாட்டு பாட வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறி ஒரு பாடலை பதிவையும் பதிவு செய்துள்ளார்.

அமிதாப்பச்சனை அடுத்து ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது புளூடிக்கை மீண்டும் எப்போது பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் மகன் சஞ்சய் இயக்கிய குறும்படம்.. செம்ம தரமான காட்சிகள்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து ரசிகர்கள் தரமான படம் என்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் உள்ளது என்று

நாங்கள் இருவருமே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம்: சூர்யா சந்திப்பு குறித்து கிரிக்கெட் பிரபலம்..!

நடிகர்  சூர்யா சந்திப்பு குறித்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியபோது, 'முதல் சந்திப்பின்போது நாங்கள் இருவருமே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். 

'PS 2' படத்தில் கமல்ஹாசன்.. என்ன அழகாக கதைச்சுருக்கத்தை சொல்லியுள்ளார்.. வைரல் வீடியோ..

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

'கொலை பண்றது வீரமல்ல, 10 பேர காப்பாத்துறதுதான் வீரம்'.. அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' டீசர்

அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாக

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை.. 3 மாதத்தில் 4 தற்கொலைகள்..!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.