close
Choose your channels

'கொலை பண்றது வீரமல்ல, 10 பேர காப்பாத்துறதுதான் வீரம்'.. அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' டீசர்

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி நடித்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள்நிதி தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரில் அருள்நிதியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் அரசியல் மற்றும் கிராமத்து சம்பிரதாயங்களை கொண்ட கதை என்பதை டீசரில் இருந்து தெரிய வருகிறது

லும் இந்த டீசலில் உள்ள ஒவ்வொரு வசனமும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ உதாரணமாக சில வசனங்கள்:

காப்பாத்துறது தாண்டா சாமி, சாமி பேர சொல்லிகிட்டு வெட்டிகிட்டு செத்திங்கன்னா, உங்களுக்கு சாமி கும்பிட தகுதியே இல்லை..

அரசியல்ல மேல ஏற ஏற கொத்துறதுக்கு பாம்பும் வரும், குத்துறதுக்கு கத்தியும் வரும்

எங்கள அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போகாட்டியும் பரவாயில்லை, ஆனால் எங்கள 50 வருஷம் பின்னாடி தள்ளிராதீங்க..

அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், யார் கண்ணன் உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை அம்பேத்குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.