close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் வில்லன்.. ரூ.150 வசூல் படம் கொடுத்த பிரபல ஹீரோவா?

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு படத்தை முடிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை மகேஷ் பாபு வேறு படத்தில் நடிக்க கூடாது என்று எஸ்.எஸ்.ராஜமெளலி நிபந்தனை விதித்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி மகேஷ் பாபு கெட்டப்பும் வெளியே தெரியக்கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்தோனேஷியா நடிகை செல்சியா இஸ்லான் உட்பட சிலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் பிருத்விராஜ் நடித்த ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய ரூ.150 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த நிலையில் தற்போது அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தின் வில்லனாக நடித்தால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment