close
Choose your channels

எதிர்பாராமல் நடந்த கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே பிரபல சீரியல் நடிகை பலி..!

Monday, May 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கில் ’திரினாயினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’மாரி’ என்ற சீரியலின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பவித்ரா ஜெயராம் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற கார் மெகபூபா நகர் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் நடிகை பவித்ரா ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் அவரது குடும்பத்தினர் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பவித்ரா ஜெயராமின் மரணம் கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளது. இதனை அடுத்து நேரில் சென்று பலர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னட சீரியல் மட்டுமின்றி இவர் ஒரு கன்னட படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் எப்படி ஒரு பரிதாபமான முடிவு ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.