close
Choose your channels

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ’தென்றல்’ என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான காயத்ரி அதன் பின்னர் ’அழகி’ ’பொன்னூஞ்சல்’ ’மோகினி’ ’பிரியசகி’ ’மெல்ல திறந்தது கதவு’ ’சரவணன் மீனாட்சி’ ’அரண்மனைக்கிளி’ உட்பட பல சீரியல்களில் தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பது சின்னத்திரை ரசிகர்கள் தெரிந்தது

இந்த நிலையில் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காயத்ரி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

இந்த நிலையில் கடந்த ஆண்டு யுவராஜ் - காயத்ரி தம்பதிகள் வளசரவாக்கம் பகுதியில் ஒரு புதிய வீட்டை கட்டிய நிலையில் தற்போது இந்த வீட்டின் மேல் தளத்தை நீடித்து கட்டி உள்ளதாகவும் அதற்கான பூஜை நடந்ததாகவும் கூறி அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் காயத்ரி வெளியிட்டுள்ளார்

சென்னையில் பிறந்து வளர்ந்த காயத்ரி, தொலைக்காட்சி சீரியல் மூலம் சம்பாதித்து சென்னையில் புதிய வீடு கட்டியது மட்டுமின்றி தற்போது மேல் மாடியிலும் விரிவாக்கி உள்ளார். இதனை அனைத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் நடந்த விசேஷத்தின் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.