எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அதிர்ச்சி பேட்டி

சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை, பாலிவுட்டில் ஒரு கும்பல் அவருக்கு எதிராக சதி செய்தது என்றும், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிப்பறித்தது என்றும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தி படங்களில் நான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி படங்களில் நான் அதிகம் பணியாற்றவில்லை. இந்தியில் ஏன் அதிக படங்களில் பணியாற்றவில்லை என தற்போது நான் யோசித்து பார்க்கின்றேன். எனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் நான் எந்தவொரு நல்ல படத்திற்கும் இசையமைக்க மாட்டேன் என்று கூறியது இல்லை என்றும், ஒருசிலர் எனக்கு எதிரான சில விஷயங்களை பரப்பியதால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே பாலிவுட்டில் நான் அதிகம் பணியாற்ற இயலாமல் போனதற்கான காரணம் என்றும் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘தில் பெச்சாரே’ திரைப்படம் இன்று ஒடிடியில் ரிலீசாகியுள்ளது என்பதும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா காலத்திலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7,043 கோடி கடன்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு கொரோனா பேரிடர் காலத்தில் முடங்கிக் கிடக்கும் தொழில் அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்முறையாக மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 13 லட்சத்திற்கும்

விமான பயணத்துல கொரோனா வந்தா செலவை நாங்களே ஏத்துக்கிறோம்!!! அலற வைக்கும் புதுயுக்தி!!!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளைக் கவருவதற்காகத் தற்போது ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறது.

ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்தது உண்மையா? மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.

பன்றி சூப்பில் கிடந்த வௌவால்!!! அலறி அடித்து கொரோனா டெஸ்ட் எடுத்த குடும்பம்!!!

சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் சென் குடும்பத்தினர் கடந்த ஜுலை 10 ஆம் தேதி உள்ளூரில் உள்ள ஒரு உணவகத்தில் பன்றி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர்.