close
Choose your channels

எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அதிர்ச்சி பேட்டி

Saturday, July 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை, பாலிவுட்டில் ஒரு கும்பல் அவருக்கு எதிராக சதி செய்தது என்றும், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிப்பறித்தது என்றும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தி படங்களில் நான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி படங்களில் நான் அதிகம் பணியாற்றவில்லை. இந்தியில் ஏன் அதிக படங்களில் பணியாற்றவில்லை என தற்போது நான் யோசித்து பார்க்கின்றேன். எனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் நான் எந்தவொரு நல்ல படத்திற்கும் இசையமைக்க மாட்டேன் என்று கூறியது இல்லை என்றும், ஒருசிலர் எனக்கு எதிரான சில விஷயங்களை பரப்பியதால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே பாலிவுட்டில் நான் அதிகம் பணியாற்ற இயலாமல் போனதற்கான காரணம் என்றும் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘தில் பெச்சாரே’ திரைப்படம் இன்று ஒடிடியில் ரிலீசாகியுள்ளது என்பதும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.