70% வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா மாதிரி… இந்தியாவிலும் சிக்கலை உருவாக்குமா???

  • IndiaGlitz, [Monday,December 21 2020]

 

கடந்த வாரம் முதல் பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கு முன்பும் கொரோனாவில் பல புதுவகை கொரோனா மாதிரிகள் தோற்றம் பெற்றன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 70% அதிவேகமாகப் பரவக்கூடிய கொரோனா தற்போது பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்களுக்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா மாதிரிகளில் VUI-202012/01 எனும் புதிய வகையை விஞ்ஞானிகள் கடந்த வாரம் அடையாளம் கண்டு உள்ளனர். பிரிட்டனில் காணப்பட்ட இந்த வகை வைரஸ்கள் மற்ற வகை வைரஸ்களை விட அதிவேகமாகப் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தவகை வைரஸ்கள் மனிதர்களுக்கு அதிக உடல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்த வில்லை என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

மேலும் பிரிட்டனில் இந்தப் புதுவகை வைரஸ்களினால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரம் 10-15% ஆக இருந்தது. ஆனால் தற்போது 60% க்கும் அதிகமாக பரவி வருகிறது என லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் அந்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளின் திறன் குறைந்து போகுமா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகளிடையே ஏற்பட்டு உள்ளது.

இதேபோல தென் ஆப்பிரிக்காவில் 501.V2 எனும் கொரோனாவின் புதுவகை வைரஸ் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை வைரஸ்கள் இளைஞர்களிடம் அதிகம் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாம் அலையை உருவாக்கலாம் என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது. கொரோனாவின் ஆரம்பக்கட்டத்தில் D614G புதிய வகை மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகைதான் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பன்மடங்காக அதிகரித்தது. அதேபோல தற்போது பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரியும் உலகில் புது சிக்கலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ‘

இந்நிலையில் பிரிட்டனில் பரவிவரும் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரிகளை குறித்து ஆலோசனை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூட்டு கண்காணிப்புக் குழு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது. அதில் பேசிய எய்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராஜேஷ் மல்ஹோத்ரா இந்தியாவில் இதுவரை 4 ஆயிரம் கொரோனா வைரஸ் மாதிரிகளின் பிறழ்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவில் அதிகரித்து இருக்கும் கொரோனா எண்ணிக்கைக்கு பிரிட்டனில் பரவி வரும் கொரோனா மாதிரிகள் காரணமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

More News

குழந்தையைப் போல சமத்தா… தூரியில் தூங்கும் கன்றுக்குட்டி… அசத்தல் வீடியோ!!!

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளிலேயே பசு மாட்டிற்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுக்கப் படுகிறது.

ரஜினிக்கு அனுப்பப்பட்ட சம்மன்: நேரில் ஆஜராவாரா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அனிதாவுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? அதிர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்படும் 'மாட்னியா' என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்

6 வயது சிறுவன் 11 லட்சத்துக்கு கேம் விளையாடிய சம்பவம்… Ipad வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

பொதுவா சிறுவர்களிடம் செல்போனைக் கொடுத்தால் யாருக்காவது போன் செய்து விடுவார்கள்,

கொரோனாவால் வரும் புதிய ஆபத்து… எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!

கொரோனா பாதிப்பு வந்தாலோ அல்லது அறிகுறிகள் இருந்தோலோ அந்த நபருக்கு வாசனை அறியும் திறன் இருக்காது.