உதவி செய்த நடிகரின் பெயரை பிறந்த குழந்தைக்கு வைத்த தாய்!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த உதவி குறித்து அனைவரும் அறிந்ததே. அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல் வழிபட்டனர் என்பதும் தெலுங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் தனக்கு உதவும்படி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை அடுத்து சோனு சூட் பதிலளிக்கையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவருடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும் அந்த குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தற்போது அந்த குழந்தை நல்ல நிலைமையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்தத் தாய் தனது டுவிட்டரில் சோனு சூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தனது மகனுக்கு ’சோனு’ என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அவருடைய உதவியால்தான் தன்னுடைய குழந்தை பிழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

உண்மையிலேயே சோனுசூட் அவர்கள் மீது தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் அவருடைய உதவிக்கு மிகப்பெரிய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

More News

'ஈஸ்வரன்' ரிலீசுக்கு பிரச்சனையா? தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த 'AAA' படம் குறித்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளதாகவும்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களைக் கண்டு அலறும் அதிகாரிகள்… மீன் பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!!

மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பாகவே ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களுக்கு தடை விதித்தது.

25 ஆக அதிகரித்த புதியவகை கொரோனா பாதிப்பு… தடுப்பூசி குறித்து எழுந்த சந்தேகம்?

இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து இருந்தார்.

தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு

நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டிய ஆசாமி… ஒரு புகாரால் முடிவுக்கு வந்த சர்ச்சை!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.