close
Choose your channels

'ஈஸ்வரன்' ரிலீசுக்கு பிரச்சனையா? தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

Thursday, December 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த ’AAA’ படம் குறித்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளதாகவும், இதனால் ‘ஈஸ்வரன்’ படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘ஈஸ்வரன்’ திரைப்படம்‌ வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள்‌ நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும்‌ கண்டனத்திற்குரியது. ’AAA’ படத்திற்கும்‌ ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும்‌ எந்தவித சம்பந்தமும்‌ இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும்‌ காத்துக்கொண்டிருக்கும்‌ வேளையில்‌, தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும்‌ அந்த படத்தின்‌ தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கணும்‌. அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும்‌ படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும்‌ போன்‌ செய்து இந்த படம்‌ வெவளியிடனும்னா ’AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம்‌ கட்டணும்‌ என்று சொல்வது எந்தவகையிலும்‌ நியாயம்‌ இல்லை. அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில்‌ மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

சொன்ன தேதியில்‌ ‘ஈஸ்வரன்’ படம்‌ வெளியாகும்‌. அதில்‌ எந்த மாற்றுக்‌ கருத்தும்‌ இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ பக்க பலமாக இருக்கும்‌. ’AAA’ படம்‌சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள்‌ இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின்‌ கதாநாயகன்‌ திரு சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்‌. மீண்டும்‌ பலமுறை பேச்சுவார்த்தை
நடைபெற்றும்‌ இரண்டு பேருக்கும்‌ உடன்பாடு ஏற்படவில்லை. AAA படத்தின்‌ தயாரிப்பாளருக்கும்‌, நடிகர்‌ சிம்புவுக்கும்‌ சரியான புரிதல்‌ இல்லை. அதன்பிறகு சங்கம்‌ மூலமாக பேசியும்‌, கட்டபஞ்சாயத்து மூலமாகபேசியும்‌ எந்தவித பலனும்‌ ஏற்படவில்லை. ஆகையால்‌ சிம்பு அவர்கள்‌ நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்‌. அந்த வழக்கு நிலுவையில்‌ உள்ளது.

எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில்‌ தான்‌ பார்த்து கொள்ள வேண்டும்‌. அதைவிட்டு விட்டு நாங்கள்‌ கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம்‌ என்று சொன்னால்‌, அவர்கள்‌ மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுக்கப்படும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. ஆகையால்‌ மீண்டும்‌ ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில்‌ ‘ஈஸ்வரன்’ படம்‌ வெளியிடப்படும்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.