இந்திய இசையுலகில் அனிருத்தின் முதல் முயற்சி

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

ராக் ஸ்டார் அனிருத் நேற்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், பிறந்த நாளில் மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அனிருத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனமும் அனிருத்தும் இணைந்து இந்தியில் பாப் பாடல் ஒன்றை தயாரிக்கவுள்ளனர். இது அனிருத்தின் முதல் இந்தி பாப் பாடல் ஆகும். இந்த பாப் பாடல் குறித்து அனிருத் கூறியபோது, 'இதற்கு முன்னர் இசை ரசிகர்கள் கேள்விப்பட்டிராத, கேட்காத பாடலாக இந்த பாடல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்திய இசையுலகின் முதல்முயற்சி என்று கூறப்படும் இந்த பாடலுக்கான பணிகள் நடந்து வருவதாகவும், வரும் நவம்பரில் இந்த பாடல் வெளியாகும் என்றும் அனிருத் கூறியுள்ளார். அனிருத்தின் இந்த புதிய முயற்சிக்கு IndiaGlitz-ன் வாழ்த்துக்கள்

 

More News

தெலுங்கு மாநில விஜய் ரசிகர்களுக்கு ஒருநாள் சோகம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வெற்றிகரமாக வரும் தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கடைசி தடையும் நீங்கியது: மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை ஆகியவற்றை கடந்து வந்த நிலையில் கடைசியாக விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பிரச்சனையையும் சந்தித்தது

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.

இளைஞர்களின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்

இசைஞானிக்கு ஒரு 'அன்னக்கிளி', ஆஸ்கார் நாயகருக்கு ஒரு 'ரோஜா', அதுபோல் ராக்ஸ்டார் அனிருத்துக்கு ஒரு '3'.

மெர்சல்' படத்தின் கதை கசிந்தது எப்படி?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே ஒரு வதந்தி இணையதளங்களில் வெளியானது.