close
Choose your channels

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

Monday, October 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை விலங்கு நல வாரியத்தின் போர்டு உறுப்பினர்கள் அவசரமாக கூடி 'மெர்சல்' படத்திற்கு தடையில்லா சான்றிதழ் அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்த வாரியத்தின் சிறப்பு அதிகாரி ஒருவர் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும், அவர் வந்தபின்னர் சாதகமான பதில் வாரியத்திடம் இருந்து கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாம்பு முதல் யானை வரை பல விலங்குகளை வைத்து பல திரைப்படங்கள் இயக்கிய ராம நாராயணன் அவர்கள் நிறுவனத்தின் படம் ஒன்றுக்கு அந்த விலங்குகளாலே பிரச்சனை ஏற்பட்டுள்ளது ஒரு சோகமான நிகழ்வாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.