தனுஷ் ரசிகர்களுக்கு கிடைக்கும் தீபாவளி விருந்து

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இயக்குனர் கவுதம் மேனன், நாளைய தீபாவளி தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு இசை விருந்து ஒன்றை அளிக்க உள்ளார்

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் இதுவரை மிஸ்டர் எக்ஸ் என்று அழைத்து வரப்படும் நிலையில் இந்த மிஸ்டர் எக்ஸ் யார் என்று இதுவரை காத்து வந்த ரகசியத்தை நாளை வெளியிடவுள்ளார். அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. 'மறுவார்த்தை பேசாதே, மடிமீது தூங்கிடு' என்ற இந்த சிங்கிள் பாடலின் இன்னொரு வடிவப்பாடல் நாளை வெளியிடவுள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஜாமோன் ஜான் ஒளிப்பதிவில் ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


.

More News

இந்தி படத்திற்கு பயன்படுத்தப்படும் தளபதியின் சூப்பர் ஹிட் பாடல்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' இன்று வெளிநாடுகளிலும் நாளை தமிழகம் உள்பட இந்தியாவிலும் பிரமாண்டமாக சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்திய இசையுலகில் அனிருத்தின் முதல் முயற்சி

ராக் ஸ்டார் அனிருத் நேற்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், பிறந்த நாளில் மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அனிருத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலுங்கு மாநில விஜய் ரசிகர்களுக்கு ஒருநாள் சோகம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வெற்றிகரமாக வரும் தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கடைசி தடையும் நீங்கியது: மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை ஆகியவற்றை கடந்து வந்த நிலையில் கடைசியாக விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பிரச்சனையையும் சந்தித்தது

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.