'காக்கா முட்டை' மணிகண்டன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. விரைந்த போலீசார்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’காக்கா முட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவரான இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து போலீசார் அவருடைய வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ’காக்கா முட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மணிகண்டன் அதன் பிறகு ’குற்றமே தண்டனை’ ’ஆண்டவன் கட்டளை’ ’கடைசி விவசாயி’ போன்ற படங்களை இயக்கினார். ’காக்கா முட்டை’ திரைப்படத்திற்கு சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற தேசிய விருது கிடைத்த நிலையில் ’கடைசி விவசாயி’ படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவருடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ரொக்கம் மற்றும் நகை திருடு போனதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி சாலையில் உள்ள எழில் நகரில் மணிகண்டனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் சென்னையில் வசித்து வருகிறார். அவருடைய டிரைவர் மற்றும் உதவியாளர்கள் மட்டும் அவ்வப்போது அலுவலகம் சென்று வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பதாகவும் இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசார் திருடர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments