'தளபதி 65' பட நாயகி விஷயத்தில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சமீபத்தில் ’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது 

ஆனால் தற்போது வந்த தகவலின்படி திடீர் திருப்பமாக ’தளபதி 65’ படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே ’மாஸ்டர்’’படத்தின் ஹீரோயினாக அவர்தான் பேசப்பட்டு வந்தார். பின்னர் திடீரென மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே 

சமீபத்தில்கூட பேட்டி ஒன்றில் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய பேசி அவருடைய தீவிரமான ரசிகையாக அடையாளம் காட்டிக் கொண்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ’தளபதி 65’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது

More News

நயன்தாராவை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

தீவிர ரசிகரை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வாக இருக்கும்போது அவ்வபோது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா,

பன்றிக்காய்ச்சல் ஒரு நோயே இல்லை.. கொரோனோவுக்கு 'யோகா' இருக்கிறது.. கலக்கும் யோகி ஆதித்யத்நாத்..!

எதனால் ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் அதை பன்றிக்காய்ச்சல் அல்லது பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறோம்.எனவே, யாரும் பன்றிக்காய்ச்சலை நினைத்து பீதியடைய வேண்டாம்.

குரங்கு ஒன்று ஆமைக்கு ஆப்பிள் ஊட்டி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..!

தங்களுக்குள் சம்பந்தமே இல்லாத விலங்குகள் ஒன்றுக்கொன்று அன்பாகாவும் ஆறுதலாகவும் இருப்பது எப்போதுமே பெரிய விஷயமாக மக்களால் பார்க்கப்படுகிறது.