close
Choose your channels

தீவிர ரசிகரை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வாக இருக்கும்போது அவ்வபோது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் தனது தீவிர ரசிகர் ஒருவரை குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சில நிமிடங்கள் பேசினார்.

ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சுந்தர் ஒரு சிறந்த ஓவியர். கடந்த பல ஆண்டுகளாக, தனது வீட்டையே ரஜினியின் ஓவியத்தால் அலங்காரம் செய்துதுள்ளார் என்பதும் இந்த ஓவியங்கள் ரஜினி பிறந்தநாளான கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சமூகவலைதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த ஓவியங்களை பார்த்து அதிசயித்த ரஜினிகாந்த் சுந்தரை நேற்று (மார்ச் 1) நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்தார். மேலும் தனது மனைவி, மகளுடன் வந்த சுந்தர், ரஜினியை சந்தித்து தான் வரைந்த ரஜினி ஓவியத்தை பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ஓவியம் வரைந்த சுந்தரை கட்டியணைத்து ரஜினிகாந்த் பாராட்டியது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.