close
Choose your channels

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீருக்கு சம்மன்..!

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னால் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் போதை பொருளுடன் டெல்லியில் மூன்று தமிழர்கள் பிடிபட்ட நிலையில் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டவர் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை தான் இயக்குனர் அமீர் இயக்கி வந்தார் என்ற நிலையில் அவரிடம் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி சற்றுமுன் வெளியான தகவல் படி ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குனர் அமீர் ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராவாரா? ஒருவேளை ஆஜர் ஆனால் அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos