விஜய்சேதுபதி பட இயக்குனர் வீட்டில் திருட்டு: உடனடியாக கவனித்ததால் விபரீதம் தவிர்ப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

விஜய்சேதுபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது என்றும் சரியான நேரத்தில் இந்த திருட்டை கண்டுபிடித்ததால் மிகப் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ’றெக்க’, ஜீவா நடித்த ’சீறு’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்தின சிவா. இவருடைய வீடு சென்னை மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரில் உள்ளது. இந்த வீட்டிற்கு சமீபத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இவருடைய வீட்டின் கதவைத் திறந்து நீர் சேகரிப்பு தொட்டியின் இரும்பு மூடியைத் திருடி கொண்டு சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் தனது குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகவும் தொட்டி அருகே தான் குழந்தைகள் விளையாடுவது வழக்கம் என்றும் இந்த திருட்டை உடனடியாக பெரியவர் கவனித்ததால் குழந்தைகள் தொட்டியில் விழாத வகையில் விபரீதம் தவிர்க்கப்பட்டதாகவும் இயக்குனர் ரத்தினசிவா தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது இந்தியக் கிரிக்கெட்

எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது: நடிகை அமலாபால் குஷி!

எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது என நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' மற்றும் 'ஜெயில்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சமீபத்தில் வெளியான படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எலிமினேஷனுக்கு பின்னர் சந்தித்து கொண்ட வருண்-அக்சரா: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான வருண் மற்றும் அக்சரா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு பின் இருவரும் சமீபத்தில்