close
Choose your channels

மீண்டும் ஒருமுறை பவரை நிரூபித்த ஆரி ரசிகர்கள்!

Saturday, January 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் முடிந்த ’டிக்கெட் டு பினாலே’ டாஸ்க்கில் சோம் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது

நேற்றைய கயிறு பிடித்திருக்கும் டாஸ்கில் ஷிவானி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்கு பிடித்தனர் என்பதும் இதில் ஷிவானி வெற்றி பெற்றார் என்ற தகவல் வெளிவந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் உள்ள மொத்த சுற்றுகளிலும் சேர்ந்து 43 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் சோம் உள்ளார். இதனால் சோம் அதிக புள்ளிகள் பெற்ற வகையில் அவர் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது மட்டுமின்றி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஆரி முதலிடம் பெற்று சேவ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து ஆரியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆரி ஒவ்வொரு முறையும் நாமினேஷனில் சிக்கும்போது முதலில் அவர் தான் சேவ் செய்யப்படுவது ஆரம்பம் முதலே வழக்கமாக இருந்து வருகிறது. இதில் இருந்து ஆரி ரசிகர்கள் இதுவரை தங்களின் பவரை நிரூபித்த வந்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளனர். இதேபோல் இறுதி போட்டியிலும் ஆரியின் ரசிகர்கள் தங்கள் பவரை பயன்படுத்தி ஆரிக்கு டைட்டில் பட்டம் பெற்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.