மகள் பிறந்த நாளில் ஆரி கொடுத்த ஆக்கபூர்வமான பரிசு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அவர் விவசாயம் குறித்து பெருமை உரிய விஷயங்களை தெரிவித்து வருகிறார் என்பதும், அவரது அறிவுரையின்படி தான் பாலாஜியே விவசாயம் செய்யவிருப்பதாக அறிவித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ஆரியின் மகள் ரியாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஆரி, விதைகளை பரிசாக கொடுத்து இருக்கின்றார். அந்த விதைகளை ஆரியின் மகள் விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரியா. இன்று நாம் விதைக்கும் ஒரு விதை நாளைய உணவுக்கான மூலதனம் ஆகும். நானும் ஒரு விவசாயி தான். நம்முடைய சொந்த உணவு தேவைகளை நாமே வளர்த்துக் கொள்வோம். எங்கள் வீட்டில் ஒரு சிறிய மாடி தோட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இவ்வளவு சிறிய வயதிலேயே விவசாயம் பற்றிய அறிவை தனது மகளுக்கு கற்பித்து வரும் ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் தனது மகளுக்கு ஆக்கப்பூர்வமான பரிசு கொடுத்த ஆரிக்கு வாழ்த்துக்துகள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்

More News

சென்னையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்… என்ன காரணம்?

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்: முதல் நபராக உதவிக்கு ஓடி வந்த விராத்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பது தெரிந்ததே.

அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு: மீண்டும் பாலாவுடன் இணைந்த ஷிவானி?

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஷிவானி நாராயணன் அவரது கைக்குள் இருந்ததால்தான் தனது தனித்தன்மையை இழந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டார்

திருமணமான ஒருசில மாதங்களில் கணவரை பிரிந்த தமிழ் நடிகை!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் திருமணமான ஒரு சில மாதங்களில் கணவரை விவாகரத்து செய்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.