close
Choose your channels

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு: மீண்டும் பாலாவுடன் இணைந்த ஷிவானி?

Friday, February 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஷிவானி நாராயணன் அவரது கைக்குள் இருந்ததால்தான் தனது தனித்தன்மையை இழந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டார். பாலாஜி உடன் அவ்வப்போது சிறு சிறு மோதல்களில் ஈடுபட்டிருந்தாலும் பாலாஜியின் பிடியில்தான் அவர் கடைசிவரை இருந்ததாக கூறப்பட்டது

இருப்பினும் கடைசி நேரத்தில் அவர் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அபாரமாக விளையாடி சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீஎன்ட்ரி செய்தபோது பாலாஜியுடன் அவர் கடுமையாக வாக்குவாதம் செய்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜியை ஷிவானியை சந்தித்தாரா? இருவரும் தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டார்களா? என்பது குறித்து தகவல் தெரியாமல் இருந்தது. இதனை அடுத்து சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’பிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா ஆகியோர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை அடுத்து ஷிவானி, பாலாஜி உடன் மீண்டும் தனது நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் அதற்காக வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.